Pages

Saturday, April 23, 2011

ஏன்,ஏன் ,ஏன் ?

நிலவே நீ காய்வது ஏனோ  ?
நிம்மதி அற்றோர் வாழ்வில் 
நிம்மதி வூட்டவா .

தென்றலே நீ தவழ்வது ஏனோ?
தேன் மலர் மணத்தை
 தெருவில் பரப்பவா ! 

மலரே நீ மலர்வது ஏனோ ?
மங்கையர்வாழ்வை 
உவமை காட்டவா .

ஞாயிறே நீ சுடுவது ஏனோ 
நீதி அற்ற ஞாலம் 
அழிகவே என்றா .

இரவே நீ இருள்வது ஏனோ 
இருட்டில் தீமையை 
விரைந்து வளர்க்கவா. 

மழையே நீ பொழிவது ஏனோ 
நல்லோர் பல பேர் 
உண்டென்று எண்ணியா .

புயலே நீ பொங்குவது ஏனோ 
பொறுமை காத்தது 
போதுமென்று எண்ணியா .

மரமே நீ அசைவது ஏனோ 
மனிதனை போல நான் 
மடையன் இல்லை என்றா.

அலையே நீ அலைவது ஏனோ 
வாழ்க்கையின் உவமை 
நீ என்று காட்டவா . 

No comments:

Post a Comment