Pages

Saturday, April 23, 2011

எழு-துணி -முடி

காலத்தை வீணாய் கழிக்காதே 
பல கடமைகள் உண்டு நீ மறக்காதே 
வாழ்க்கையை சுமையாய் நினைக்காதே 
வருவது வரட்டும் மலைக்காதே. 

எண்ணத்தை தட்டி எழுப்பிவிடு -அதன் 
எல்லைவரை சென்று  பார்த்துவிடு
தொல்லை இல்லா வாழ்க்கை சுவைக்காது 
துன்பமும் இன்பமும் நிலைக்காது. 

ஆசைகள் உன்னை அழித்துவிடும் 
ஆணவம் உன்னை கெடுத்து விடும் 
ஒழுக்கம் உன்னை உயர்த்திவிடும் -மன 
ஊக்கம் கொண்டால் மதிப்பு வரும். 

தொல்லைகள் கொடுப்பதை மறந்து விடு-வரும்
 தொல்லையை எதிர்க்க துணிந்து விடு 
நல்லவை செய்திட நினைத்து விடு -பிறர் 
நலம் பெற உனையே கொடுத்து விடு.




No comments:

Post a Comment