தேனாய் நினைத்த வாழ்க்கை
கருந்தேளாய் மாறினாலும்-வாழ்வை
நிந்தை செய்திடாதே
உன் சிந்தை தளர்ந்திடாதே!!
இந்த
விந்தை உலகில் நீ என்ன
சந்தை விலை பொருளா ?அந்த
ஈச ன்உனக்கு ஈந்த சிந்தை உள்ளவரை
கை ஏந்தி பிழைத்திடாதே -உன்
மெய்கெட்டு அழிந்திடாதே .
மெய்கெட்டு அழிந்திடாதே .
கருத்துண்டுஉனக்கிரெண்டு
கையுமுண்டு -தொழில்
மருத்துண்டு சோம்பிடாதே-துயர்
பீடித்து வீழ்ந்திடாதே
கோணிய தென்னை மரம்
குலை தாங்கி நின்றாலும்
தலை சாய்ந்து வீழ்வதில்லை -தன்
நிலை தாழ்த்தி கொள்வதில்லை.
உயிர் தாங்கிய இவ்வுடம்பு
ஓடாய் உடைந்தாலும் -நீ
ஓடாய் உடைந்தாலும் -நீ
ஓய்ந்து இருந்திடாதே -தலை
சாய்ந்து வீழ்ந்திடாதே.
.

No comments:
Post a Comment