Pages

Saturday, April 23, 2011

அன்பு

பசும்பயிர் மழை நோக்கும்
பசும்பால் கிழை நோக்கும் 
கருவண்டு தேன் மொய்க்கும் 
மலரும் அதை தாங்கி நிற்கும்

தரை படர்ந்த கொடியதனை
தன் மேலே படரவைக்கும் 
கொம்பினதன் அன்பை போல 
மானுடத்தில் கண்டதுண்டோ 

அன்பிற்கு இவை போல 
அழகான உவமை உண்டோ ?
என்புதோல் உடம்பப்பா 
அன்பு அதில் இல்லைப்பா.

No comments:

Post a Comment