பசும்பயிர் மழை நோக்கும்
பசும்பால் கிழை நோக்கும்
கருவண்டு தேன் மொய்க்கும்
மலரும் அதை தாங்கி நிற்கும்
தரை படர்ந்த கொடியதனை
தன் மேலே படரவைக்கும்
கொம்பினதன் அன்பை போல
மானுடத்தில் கண்டதுண்டோ
அன்பிற்கு இவை போல
அழகான உவமை உண்டோ ?
என்புதோல் உடம்பப்பா
அன்பு அதில் இல்லைப்பா.

No comments:
Post a Comment