ஆதி வகுத்த வழி வாழ பிறந்தவனே
பாதி வளர்ந்து விட்டாய்
பக்குவம் அடைந்துவிட்டாய்
மீதி உள்ள காலமெல்லாம்
பூத்து குலுங்க வேணும் .
காலேஜ் கடந்து விட்டாய் -நல்ல
நாலேட்ஜ் வளர்த்து விட்டாய்
டீனேஜ் வேலைக்கெல்லாம் -ஒரு
பாண்டேஜ் போடவேணும்
மேரேஜ் செய்ய வேணும் -அதை
மேனேஜ் பண்ணவேணும்
ஓல்ட் ஏஜ் வருவதற்குள் -பணத்தை
ஸ்டோரேஜ் செய்ய வேணும் .
நான் என்று சொல்லாதே-அது
நலத்தை எல்லாம் அழித்து விடும் .
நாம் என்று சொல்வாயானால் -அது
நல்லதெல்லாம் கொண்டு வரும். .
பஞ்சணை பாதையல்ல வாழ்க்கை ,
உற்றுப்பார் தெரியும் அதில் சீழ்க்கை ,
வஞ்சனை மேடுண்டு
வஞ்சியாரால் தாழ்வுண்டு-நல்
சிந்தனை மனம் கொண்டால்
சீரான ஏற்றமுண்டு .
கற்று தெரிந்து கொள்
சுற்றம் புரிந்து கொள்
குற்றமொன்றும் இன்றி -உனது
கொற்றம் அமைத்து கொள்.

No comments:
Post a Comment