Pages

Saturday, April 23, 2011

ஆதி வகுத்த வழி வாழ பிறந்தவனே 
பாதி வளர்ந்து விட்டாய்
பக்குவம் அடைந்துவிட்டாய்
மீதி உள்ள காலமெல்லாம் 
பூத்து குலுங்க வேணும் .

காலேஜ் கடந்து விட்டாய் -நல்ல 
நாலேட்ஜ் வளர்த்து விட்டாய் 
டீனேஜ் வேலைக்கெல்லாம் -ஒரு 
பாண்டேஜ் போடவேணும்

மேரேஜ் செய்ய வேணும் -அதை 
மேனேஜ் பண்ணவேணும் 
ஓல்ட் ஏஜ் வருவதற்குள் -பணத்தை 
ஸ்டோரேஜ் செய்ய வேணும் .

நான் என்று சொல்லாதே-அது 
நலத்தை எல்லாம் அழித்து விடும் . 
நாம் என்று சொல்வாயானால் -அது 
நல்லதெல்லாம் கொண்டு வரும். .

பஞ்சணை பாதையல்ல வாழ்க்கை ,
உற்றுப்பார் தெரியும் அதில் சீழ்க்கை ,
வஞ்சனை மேடுண்டு
வஞ்சியாரால் தாழ்வுண்டு-நல்
சிந்தனை மனம் கொண்டால் 
சீரான ஏற்றமுண்டு . 

கற்று தெரிந்து கொள் 
சுற்றம் புரிந்து கொள் 
குற்றமொன்றும் இன்றி -உனது 
கொற்றம் அமைத்து கொள். 






No comments:

Post a Comment