ஆ.ப.ந.:உனக்கு வேற சொந்தக்காரர்கள் இருக்கிறார்களா .உன்னை வந்து
பார்பார்களா
ஆ.ப : எங்க சித்தி யும் மாமாவும் இருக்கிறார்கள் .சித்தி அன்பாய் இருப்பார்கள்.
ஆ.ப.ந. உங்க மாமா அத்தை ஒன்னோடு அன்பாய் இருப்பார்களா.
ஆ.ப : அத்தை என்னை அனாதைன்னு எப்பவும் திட்டுவாங்க.பக்கத்து
வீட்டுகாரர்களும் என்னையும் எங்க அம்மாவையும் திட்டுவாங்க.
ஆ.ப.ந. அப்ப ஒம்மனசுல என்ன தோணும் .
ஆ.ப : ரொம்ப கோபம் வரும்.யாருக்கிட்டயும் பேசமாட்டேன். தனியா
ஒக்காந்து அழுதுக்கிட்டே இருப்பேன்.அம்மாச்சி மட்டுந்தான் எம்மேல பாசமா
இருப்பாங்க.
ஆ.ப.ந. ஒன்ன இங்க கொண்டு யார் சேர்த்தார்கள்.
ஆ.ப : எங்க மாமாவும்,அம்மாச்சியும்.
ஆ.ப.ந. இங்க ஒனக்கு புடிச்சிருக்கா.
ஆ.ப.. ஆமா.
ஆ.ப ஒன்னோட ஆசை என்ன.
ஆ.ப: நெறையா படிக்கணும் .டாக்டருக்கு படிக்கணும் .
ஆ.ப.ந. ஏன் டாக்டருக்கு படிக்கணுமுன்னு ஆச வந்தது.
ஆ.ப: எங்க அம்மாச்சி ரொம்ப ஒடம்பு சரியில்லாம இருக்காங்க .அவங்கள
நல்லாக்கணும்.( இப்படி சொல்லும் போது அந்த குழந்தையின் முகம் தான் ஒரு
டாக்ட்டர் ஆகி விட்டது போலவே ரொம்ப மகிழ்ச்சியோட காணப்பட்டது. )
ஆ.ப.ந. உன்னுடை ஆச கடவுளால் நிறைவேற்றப்படும் .உனக்காக நாங்க
எல்லோரும் கடவுள் கிட்ட பிரார்த்தனை செய்கிறோம் .
(கடைசியாக மாமா எங்க அம்மாவ கூட்டிட்டு வருவீங்கல்ல என்று அதிக
நம்பிக்கையில் கேட்டது மனதை உருக்குவதாக இருந்தது.)
கண்டிப்பாக ஒங்க அம்மா ஒன்னவந்து பாப்பாங்கம்மா ன்னு சொல்லிவிட்டு
வெளியில்.வந்தேன்.

No comments:
Post a Comment